இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கிறது கனடா
25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறவேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் கொமன்வெல்த் கூட்டத்தில் இலங்கைவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் பகிரங்கமாக விமர்சித்த பின்னர், கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உள்நாட்டுப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியுள்ள நிலையில், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதை எம்மால் காணமுடியவில்லை. கொழும்பில் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு வளர்ந்து கொண்டிருப்பதைத் தான் எம்மால் காண முடிகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
Post a Comment