பிரிட்டன் லிவர்பூலில் இலங்கையர் குத்திக்கொலை
பிரித்தானிய லிவர்பூல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட மோதலில் கழுத்தில் கத்தி வெட்டுக்கு உள்ளாகி இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திவெட்டுக்கு உள்ளாகி விழுந்து கிடந்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இலங்கை நபரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என மேர்சிசைட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முகத்தை மூடிய நபர் ஒருவர் இலங்கை பிரஜை மீது தாக்குதல் நடத்தியதை வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவால் (CCTV) அவதானிக்க முடிந்துள்ளது.
கடந்த 12 மாதங்களாக தனது குடும்பத்துடன் பிரித்தானியாவில் வசித்து வந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment