வஞ்சகம் செய்த 9000 இலங்கை வைத்தியர்கள்
பயிற்சிகளுக்காக வெளிநாடு சென்ற சுமார் ஒன்பதாயிரம் மருத்துவர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றியவர்களே தற்போது வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும் இதனால், அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பெரும்பாலான மருத்துவர்கள் மேல் படிப்பை முடித்துக்கொண்டு அங்கேயே தங்கி விடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேஷ நிபுணத்துவம் பெற்றுக்கொண்ட பல மருத்துவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் சேவையாற்றி வருகின்றனர். எனவே, மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக பயிற்சிகளை வழங்கி அவர்களை அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment