சியா பிரிவினர் மீது குண்டுத் தாக்குதல் - ஈராக்கில் 32 பேர் மரணம்
ஈராக்கில் சியா பிரிவு யாத்திரிகர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
வட பிராந்தியத்திலுள்ள ஹிலா நகரில் ஒரு முதலாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தாக்குதல் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படையினர்கள் வெளியேறவுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment