Header Ads



2.341 ரூபா செலுத்தி லெப்டொப் வாங்கலாம் - அரசாங்கம் அறிவிப்பு


இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கணனிகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதிய திட்டம் ஒன்று அமுல்செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.  

இதன் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 2341 ரூபாவை மாத்திரம் செலுத்தி இலங்கையர் எவரும் கணனிகளை கொள்வனவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் 8 மணித்தியாலங்களில் ஒருவருக்கு கணனி சொந்தக்காரராக முடியும். 

HP ரகத்தின் 5 மடிகணனிகள் இந்த திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் பிரதீப் குணவர்த்தனதெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.