Header Ads



யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் 11 கடைகளில் கொள்ளை


யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் ஒரே இரவில் 11  கடைகளில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட வகையில் பதினொரு கடைகளிலும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் ஏழு கடைகளிலும் திருவெல்வேலி பரமெஸ்வராச்சந்தியில் நான்கு கடைகளிலும் இந்தக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. படையினரின் காவலரண்களும் இரவுநேரப்படைகளின் காவல்களும் உள்ள சமயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  இப்பகுதியில் கடந்த ஓரு மாத காலத்தில் இடம்பெற்ற மூன்றாவது கொள்ளை சம்பவம் இதுவாகும்.

முன்னதாக இப்பகுதியில் உள்ள மதுபானச்சாலை ஒன்று கொள்ளையிடப்பட்டிருந்தது. கூடியளவில் படைமுகாம்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ள இப்பகுதயினில் இக்கொள்ளை இடம்பெற்றுள்ளமை  பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கவைத்துள்ளது.

No comments

Powered by Blogger.