Header Ads



ஐ போனுக்காக ஒரு படுகொலை


அப்பிளின் ஐ போனுக்காக நபரொருவர் திருகாணிகளை கழற்றும் உபகரணத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் 38 வயதான செயித் சூன்ஸ் என்பவராவார். 

குறித்த நபர் தனது நண்பரின் வீட்டிற்கு அருகில் வைத்தே கெய்த் சூன்ஸ் (36 வயது) என்ற மேற்படி நபர் கொல்லப்பட்டுள்ளார்.  கெயித்தை தாக்கிய இரு இளைஞர்கள் அவரது ஐ போனை பறித்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் படுகாயத்துக்குள்ளான கெயித் சம்பவம் நடைபெற்று 5 மணித்தியாலங்களின் பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.  இந்த படுகொலையுடன் தொடர்புபட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.