Header Ads



கொழும்பில் இன்று எதிர்கட்சிகள் பாரிய ஆர்ப்பாட்டம்


அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் இன்மை, சரத் பொன்சேகாவின் விடுதலை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, விரைவான அரசியல் தீர்வு, தனியார் நிறுவன சுவீகரிப்புச் சட்டம், பாராளுமன்றில் எதிர்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஐதேக, ஜ.ம.மு, த.தே.கூ உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புக்கள் கலந்து கொள்ளம்.

No comments

Powered by Blogger.