Header Ads



குவைத்தில் சிறுவனின் கையை உடைத்த இலங்கை பெண் கைது


குவைத்தில் பணிபுரியும் இலங்பைப் பெண் ஒருவர் அந்தநாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 30 வயது மதிக்கத்தக்க இந்த இலங்கைப் பெண், தான் பணிபுரியும் வீட்டு உரிமையாளரின் 3 வயதுடைய சிறுவனின் கையை உடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு இலங்கைப் பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வீட்டு உரிமையாளர் வர்த்தக நிலையத்தில் இருந்து வெளியில் சென்றுள்ளார். 

மீண்டும் வர்த்தக நிலையம் திரும்பியபோது மகனின் கை உடைக்கப்பட்டதை அறிந்ததாகவும் கோபத்திற்கு உள்ளான பணிப்பெண் மகனின் கையை முறித்துள்ளதால் அதில் உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளரான தாய் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட ஒருவர் தாய் வருவதற்கு முன் பொலிஸில் முறைப்பாடு செய்து அமீர் வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.