Header Ads



பேஸ்புக்கில் தொல்லை தருகிறார்களா..? அச்சமின்றி முறையிடுங்கள்


பேஸ்புக் குற்றச்செயல்கள் தொடர்பாக இதுவரை 1600 க்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான பேஸ் புக் முகவரி தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு குறிப்பிட்டார்.

தமக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய போலியான பேஸ் புக் முகவரிகளை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான போலி முகவரிகளைக் கொண்ட பேஸ் புக் தொடர்பாக ABUSE@CERT.GOV.LK என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அறிவிக்க முடியும் என ரோஹன பல்லியகுரு மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.