Header Ads



யாழ்ப்பாணத்தில் போலி முகவர்கள் அதிகரிப்பு - பொலிஸார் எச்சரிக்கை


யாழ்ப்பாணத்தில் போலி முகவர்கள் மற்றும் அவர்களால் ஏமாற்றப்படுபவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து வருவதாக யாழ்.பொலிஸ் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறியே பலர் முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், அண்மையில் தனியார் பாடசாலை ஒன்றில் இவ்வாறு வேலைவாய்யுப் பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்றைய தினமும் ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 2010 ஓகஸ்ட் மாதம் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 600,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு  நாளாந்தம் போலி முகவர்களினால் பலர் ஏமாற்றப்படுகின்றனர் எனவும், போலி முகவர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.