இலங்கையில் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம்
கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு திட்டங்கள் மேல் மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கரதியான மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்தார்.
மலேசியா மற்றும் இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார். இதன் ஊடாக 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
Post a Comment