Header Ads



சவூதியில் இலங்கை பெண்னை படுகொலைசெய்து புதைத்தவர் கைது


சவுதி அரேபிய - ரியாத் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ரியாத்தில் உள்ள இலங்கை தூதர அதிகாரிகள் ரியாத் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். சித்ரா ரணசிங்க என்ற 44 வயதுடைய இலங்கைப் பெண் மற்றுமொரு இலங்கைப் பெண்ணால் கொலை செய்யப்பட்டு வீட்டு வளவில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைக்கப்பட்ட சடலத்தை ரியாத் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த கொலை சம்பவத்தை அடுத்து ரியாத் உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்த சமையல்காரி, இல்லத்தரசி மற்றும் அவருடைய கணவர் ஆகியோரை ரியாத் பொலிஸார் கைது செய்தனர். விசாரணைகளுக்கென குறித்த மூன்று சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணும் கொலையுடன் தொடர்புபட்ட இலங்கைப் பெண்ணும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

சவுதியில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டு உரிமையாளரிடம் பணிபுரிந்து வந்துள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் தற்போது மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனை வழங்கில் சிறையில் உள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.