Header Ads



யாழ் - கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டம்


தகவல்
அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்

இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 2011 டிசம்பர் 10 சனிக்கிழமை அன்று யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வருடாந்தப்பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, 

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தில், அதன் ஸ்தாபக அமைப்புகளும் ஜும் ஆப்பள்ளிவாயல்களும் தலா 2 பிரதிநிதிகளைக் கொண்டிருக்க, ஏனைய அமைப்புகள், பள்ளிவாயல்கள், சமூகப்பிரதிநிதிகள் 01 பிரதிநிதியினைக் கொண்டிருப்பர். 

எனவே தாங்களின் அமைப்பு சார்பாக அல்லது பள்ளிவாயல் நிர்வாகம் சார்பாக தற்போது அங்கத்துவம் வகிக்காத வேறு ஒருபிரதிநிதியினை தாங்கள் நியமிக்க விரும்பினால்,

அல்லது இதுவரை அங்கத்துவம் வகிக்காத அமைப்பொன்றிற்கு அல்லது பள்ளிவாயலொன்றுக்கு புதிய அங்கத்துவத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்பினால்

அல்லது எவரேனும் சமூக ஆர்வலர் ஒருவர் தான் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சபையில் அங்கத்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள நாடினால்

அவர்கள் சம்மேளனத்தின் நிர்வாகக்குழுவிற்கு எழுத்துமூலம் விண்ணப்பிக்க முடியும். சுயமாகத் தயாரிக்கப்பட்ட எழுத்துமூல விண்ணப்பக் கடிதத்தில் தங்கள் முகவரி, தொடர்பிலக்கங்கள், என்பவற்றை தெளிவாக எழுதி சம்மேளனத்தின் தற்போதைய அங்கத்தவர் ஒருவரினூடாக சம்மேளனத்தின் செயலாளருக்கு எதிர்வரும் 2011 டிசம்பர் 04 (ஞாயிற்றுக்கிழமைக்கு) முன்னர் கிடைக்கும்படி செய்யவும்.

பள்ளிவாயல்கள், அமைப்புகள் சார்பாக விண்ணப்பிப்பதாயின் அவை குறித்த அமைப்பின் அல்லது பள்ளிவாயலின் கடிதத்தலைப்பில் இடம்பெறுவது அவசியமானதாகும்.

No comments

Powered by Blogger.