புலம்பெயர்ந்த விரிவுரையாளர்களை நாட்டுக்கு அழைத்துவர திட்டம்
மேற்படிப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ள விரிவுரையாளர்கள் உள்நாட்டில் தமது கல்விப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் திட்டமொன்றை உயர் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவென அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி பட்டப்படிப்புகளுக்கென வெளிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் பலர் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் அங்குள்ள பல்கலைக் கழகங்களிலேயே பணியாற்றுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் தங்கியுள்ள விரிவுரையாளர்களுக்காக அரசு பெருந்தொகை நிதியினை செலவிட்டு வருவதையும் உயர் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment