போகம்பறை ஆயுள்கைதிகள் 500 பேர் கண்களை தானம்செய்ய முன்வருகை
போகம்பறை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளில் 500க்கு மேற்பட்டோர் தமது கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை விட பல கைதிகள் தமது கண்களை மாத்திரமன்றி தமது உடலையும் வைத்திய பீடத்திற்கு பொறுப்பளிக்கவும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை சிறைக்கைதிகள் தமது உடலுறுப்புக்களை தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தமது கண்களையும் உடலையும் தானமாக வழங்க முன்வந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment