Header Ads



'சிறுதுளி பெரு வெள்ளம்' - தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள்


வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு அல்லது பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை 21 வருடங்கள் நிறைவடைகிறது.

உலகின் எந்தப்பாகத்திலும் முஸ்லிம்கள் ஒரேயடியாக இருமணி அவகாசத்தில் இவ்வாறு இனச்சுத்திகரிப்ப செய்யப்படவேயில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை என்னவோ உலகம் கண்டுகொள்ளவேயில்லை. வடக்கு முஸ்லிம்களுக்கு பலிகள் செய்த கொடூரங்கள் வெளியுலகிற்கு வராமைக்கு நமது பக்கத்திலும் சில தவறுகள் உண்டுதான்.

அதாவது வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து சர்வதே சமூகத்திடம் முறையிடவோ, நீதிபெறவோ அல்லது பிரச்சாரப்படுத்தவோ நாம் முயலவில்லை.

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட கொடூரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமாயின் அதனை நாம் மிக இலகுவாக மேற்கொள்ள முடியும். ஆம், பேஸ்புக் என்ற சமூகத் தளம் எமது கையில் உள்ளது. அரபு புரட்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள இந்த பேஸ்புக் மூலம் எமது சமூகத்திற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட அநியாயங்களையும் பகிரங்கப்படுத்துவோம்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் பேஸ்புக் frofile picture  இல் வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை வெளிப்படுத்தும் ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிடுங்கள். உங்களின் இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் சிறு உதவியாக இருக்கட்டும். உங்கள் பேஸ்பக்கில் உள்ள வேறுநாட்டு நண்பர்கள் மாற்றுமத சகோதரர்கள் இதன்மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு புலிகள் மேற்கொண்ட அக்கிரமம் குறித்து பலரும் அறிந்துகொள்வர்.

எமது இந்த முயற்சிக்கு சகல இலங்கை முஸ்லிம்களினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம்..!

No comments

Powered by Blogger.