Header Ads



பேஸ்புக்கில் முஹம்மது நபியை, இழிவுப்படுத்திய இந்தியர் துபாயில் கைது....!

-முகநூல் முஸ்லிம் மீடியா-

இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக துபாயிக்கு வேலைக்கு சென்ற இந்தியர் ஒருவர் பேஸ்புக்கில் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்திய பதிவிட்டவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

இந்தியாவில் பார்க்கப்படுவது போல் சாதி, மதம் பாராமல் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அந்த நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு தொழில் மற்றும் பணி போன்றவற்றில் தாராள வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.

அவ்வாறு அந்த நாட்டு விசா பெற்று வசிக்கும் இந்தியர்கள் மத ரீதியிலான அனுஷ்டானங்களை பூஜைகளை நடத்திக் கொள்ள கிறித்தவ தேவாலயம், இந்து கோவில், சீக்கிய குருத்துவதரா போன்ற மாற்று மதாலயங்கள் (சவுதியை தவிர்த்து) அந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதை அங்கே வசிக்கும் முஸ்லிம் அல்லாத மற்றமத அன்பர்களை கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் பன்றி இறைச்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தவருக்காக அந்த இறைச்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சவுதியை தவிர்த்து) அங்காடிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்காக என்று அறிவிப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.

பிழைப்புக்காக அந்த நாடுகளுக்கு சென்றிருப்பவர்களாக இருப்பினும் அவர்களது மத மற்றும் தனி சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்காமல் உரிமை வழங்கியிருப்பதன் மூலம் அந்த நாட்டு அரசுகளின் சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சிலர் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் அந்த நாடுகளின் அலுவல் மதமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தை அந்த நாடுகளில் இருந்து கொண்டே இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுப்படுத்துவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர்.

எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களின் இன, மொழி, மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க முயலுங்கள்.

தகவல் உதவி : gulfnews.com

4 comments:

  1. இவனை கல்லால் அடித்தே .....கொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. இவனை கல்லால் அடித்தே .....கொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. Umar hamza ungal islamiya arivai enni naan kavalai paduhiren. During prophets time kaafirhal ithai vidavum ilivupaduthinargal. Remember that old lady who used to put rubbish on prophets head and path? If prophet reacted badly she wouldn't have became a Muslim.
    So please Muslims use wise words when it comes to other religious people. Avargal ariyamaiyal thaan avvaru comments poduhurarhal.
    Already people are calling Islam is a barbaric religion. You just gave them a extra comment to prove their misconception. So be wise and be nice. Islam is a religion of peace.
    Naangal prophet sollatha ettanayo visayangalai seihirom. So If we really love our beloved prophet let's try to change ourself and follow him than criticising a non Muslim who doesn't even know much about Islam or the prophet.

    ReplyDelete
  4. கோதரர் வொயிஸ் சிறிலங்காவின் கருத்துக்கள் புதுமையாக இருக்கிறதே அவர்கள் அறியாமையினால் செய்கின்றால்காளா காழ்ப்புனர்ச்சியினால் செய்கின்றார்களா இந்சியாவில் புகையிரதத்தைக் கொளுத்திவிட்டு அதை முஸ்லிம்களின் தலையில் போட்டு முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்தனர் அது அறியாமையா? முஸ்லிம்கள் அவர்களின் மதப் பெரியார்கள் தொடர்பாக பேசுகினறார்களா அல்லது பதிவிடுகின்றார்களா? அன்று அறபியாவில் இறைத்துhதர் அவர்கள் உண்மையை உரைக்கும் போது எதிர்ப்பு வந்தது சகித்துக் கொண்டார்கள் தற்போது முஸ்லிம்கள் சிலைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யாத நிலையிலும் அதுவூம் தான் பிளைக்கச் சென்ற நாட்டில் இருந்து கொண்டு செய்வது காழ்ப்புணர்ச்சியா? அறியாiமா?

    ReplyDelete

Powered by Blogger.